Sunday, December 1, 2013

கண்ணால் உன் அழகை 
அளந்து
இதயத்தால் உன் காதலை அறிந்து
மொளனத்தால்  உன் எண்ணங்களை அறிந்து

மொழிகளை வடிகட்டி எடுத்து 
உனக்கு கவி சிலை செதுக்கி

இதழ்களால் இனிய கதை பேசி
மயிலிறகால் மனம் தடவ
.இசை அருந்தி

தனிமையில் இருக்கையில் 
உன்நினைவுகளோடு தவமிருக்கும்

நிலைதான் காதல் தவம்.

-------------------------

நீ.....தூங்காத இரவுப்பொழுதில்
என் கீதம் யாவும் நீயாக....
உன்னை என் இசையில் தாலட்டுவேன்!

--------------------------------

அன்பின் வரவிலக்கனமாய் நீ...
எண்ணங்களும் செயல்களும் நீ...
உயர்வின் வேராய் நீ....
திருப்பங்களின் ஆசிரியை நீ..

வோத்தத்தின் புத்தகம் நீ...
வாழ்வின் தேடல் நீ
பருவத்தின் கனவு நீ.. 
தீண்டும் தென்றலும் நீ..

கண்களின் கனவு நீ..
நிஜத்தின் விம்பம் நீ..
வெப்பத்தின் நிழல் நீ..
புடவையின் நூலும் நீ..

குறும்செய்யும் எறும்பும் நீ..
கரும்பின்
சுவையும் நீ

---------------------------

உறக்கத்தின் விம்பத்தில்..
விழிகளில் நிலா தாளமிட..
நட்சத்திரங்கள் எல்லாம் ..
எல்லாம் மின் மினி பூச்சிகள் போல்..
வந்து வந்து மறைய.

பூக்கள் சத்தமின்றி முத்தமிட..
பனித்துளிகள் புற்கள் மேல் நடனமிட..
இரவின் தேடல் தொடர..
முடிவின்றி பயணிக்கும் ..
வாழ்வின் அர்த்தங்களை தேடத்தொடங்க..
காத்திருப்பதுதான்..
விடியலின் ஆரம்பம்!

------------------------

இரவுப்பொழுதில் அழகிய கவிதையாய் 
ஒருவரை ஒருவர் அறிந்து தெளிந்து
செதுக்கி எடுக்கும் சிப்பம் ஒன்று
பூமியை முத்தமிட தயாரிகிக்கொள்கின்றது.

--------
அறிந்தும் அறியாமல் தெரிந்தும் தெரியாமல்
புரிந்தும் புரியாமல் தெளிவான காதலை 
விழகளில் கான உதவுகின்றது நிலா முகம்.
--

No comments:

Post a Comment